அரச நிறுவனங்களில் அமுலாகிறது புதிய நடைமுறை.

அரச நிறுவனங்களின் விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பான முன்னோடி திட்டம் உள்துறை அமைச்சகத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்த முயற்சித்து வெற்றியடைந்ததன் பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அரச அலுவலகங்களுக்கும் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள

எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk

எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *