கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியதில் இளைஞர் படுகாயம்

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயில் மோதியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் புங்கங்குளம் ரயில் நிலையத்திற்கு அண்மையில் 2.15 (pm) மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த இளைஞனை அதே ரயிலில் ஏற்றி மீள திரும்பி யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து நோயாளர் காவு வண்டியில் ஏற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள

எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk

எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *