இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இந்த வாரத்திற்கான 02 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் நாளைய தினம் (01-11-2022) முதல் 4 ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் ஒரு மணி நேரமும், இரவு நேரத்திலும் ஒரு மணி நேரமும் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

