எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், அதற்கு அடுத்த தினமான ஒக்டோபர் 25 ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படுவதாக இராஜாங்க கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
அதற்கு பதிலாக, ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.