முதலாம் திகதிமுதல் பெரும் போகத்துக்கான உரம் விநியோகம் – கமநல சேவைகள் திணைக்களம் தெரிவிப்பு!

பெரும் போகத்துக்கு தேவையான யூரியா உரம், எதிர்வரும் முதலாம் திகதிமுதல் விநியோகிக்கப்படவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்திய கடன் உதவியின் கீழ் சிறுபோகத்துக்கு கிடைத்த யூரியா உரத்தில் எஞ்சிய கையிருப்பை பெரும்போக செய்கைக்காக விநியோகிக்கவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
முதல்கட்டமாக ஒரு ஹெக்டேயர் நெற்செய்கைக்காக 20 கிலோ கிராம் யூரியா உரம் வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, குருணாகல் ஆகிய மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கே யூரியா உரத்தை முதலில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *