தியாக தீபம் இராசையா பார்தீபனின் நினைவுதினம் இன்று ஆரம்பம் (15/09/2022)

யாழ்ப்பாணம் நல்லூரில் முன்றலில் இருந்து இந்திய அரசாங்கத்திடம் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து உயிர் நீத்த இராசையா பார்தீபனின் நினைவுதினம் இன்று தமிழர்கள் பரந்து வாழும் தாயகமான வடக்கு – கிழக்கு மாகாண பகுதிகளில் இன்று காலை வேளையில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டது.
நல்லூரில் அமைந்துள்ள இராசையா பார்தீபனின் நினைவாலயத்திலும் இன்று காலை 9.45 மணியளவில் மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இவ் நினைவு தினம் 15.9.2022 இருந்து 26.9.2022 வரை அனுஷ்ட்டிக்கப்படும் .
இதன் போது பெருந்திரளான மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *