உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தலைநகர் நேற்று (14.09.2022) கிய்வில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் வந்த வைத்தியர் ஒருவரால் சோதனை செய்யப்பட்டதாகவும், இதன்போது கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் ஜனாதிபதி பயணித்த கார் விபத்துக்குள்ளானது – விசாரணைகள் தீவிரம்!
