பாடசாலை அப்பியாச கொப்பிகளின் விலைகள் அதிகரிப்பு

பாடசாலை அப்பியாச கொப்பிகளின் விலைகள் 200 வீதத்தால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்தோடு அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ச குமார தெரிவித்துள்ளார்.
நாட்டில் காகித தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக இவ்வாறு பாடசாலை அப்பியாச கொப்பிகளின் விலைகள் அதிகரித்துள்ளது
அதிகரிப்பு விலை
இதற்கமைய ரூ.120 ஆக இருந்த 120 பக்க கொப்பிகளின் விலை தற்போது ரூ.225 ஆக அதிகரித்துள்ளது.

75 ரூபாய்க்கு விற்கப்பட்ட 80 பக்க கொப்பிகளின் விலை தற்போது 180 ரூபாவாகவும், 65 ரூபாய்க்கு விற்கப்பட்ட 40 பக்க கொப்பிகளின் விலை தற்போது 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும், 150 ரூபாவாக இருந்த 40 பக்க சிஆர் புத்தகம் தற்போது 290 ரூபாவாக உயர்ந்துள்ளது.

115 ரூபாய்க்கு விற்கப்பட்ட 40 பக்க பாடப்புத்தகம் தற்போது 230 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *