யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மடத்தடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 8 வயதுச் சிறுவனுக்கு கால் முறிந்துள்ள நிலையில், 48 வயதுடைய தந்தையும் 42 வயதுடைய தாயும் படுகாயமடைந்துள்ளனர்.
கார் சாரதி அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.