யாழ் தொண்டைமானாறு ஆற்றில் முதலை – அவதானமாக நீராடுமாறு நிர்வாகம் அறிவிப்பு

தொண்டைமானாற்றில் முதலைகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளமையால் தொண்டைமானாற்றில் நீராடுபவர்கள் அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி வெகு விமர்சையாக இடம் பெற்று வரும் நிலையில் அதிக அளவு பக்தர்கள் முருகப் பெருமானை தரிசிக்க நாட்டின் பல பாகங்களில் இருந்து வருகை தந்துள்ள நிலையில் செல்வச்சந்நிதி ஆலயத்தின் பின்புறம் உள்ள ஆற்றில் நீராடும் அடியவர்களை அவதானமாக நீராடுமாறு செல்வச்சந்நிதி ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆற்றில் முதலைகள் இருப்பது தொடர்பில் தகவல் வந்துள்ளதன் காரணமாக ஆற்றில் நீராடும் போது ஆழமான பகுதிகளுக்கு சென்று நீராட வேண்டாம் என முருகன் அடியவர்களை கேட்டுக்கொள்வதோடு ஆற்றில் போடப்பட்டுள்ள மிதப்பு எல்லைகளுக்கு உள்ளேயும், அதேபோல் மிக அவதானமாகவும் நின்று உதவிக்கு ஆட்களுடன் நின்று மேற்பார்வை செய்து நீராடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மிக மிக அவதானமாக நீராடுவதை கருத்தில் கொள்ளுமாறு சந்நிதியான் முருக பக்தர்களை மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றோம் என அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *