யாழில் நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து மரணம்

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மீள பெறுவதற்குச் சென்றிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ள்ளார்.

சம்பவத்தில் பரமேந்திரம் ரஜீவ்குமார் (வயது57) என்பவரே உயிரிழந்துள்ளார். கனடாவிலிருந்து அராலிக்கு வந்திருந்த தம்பதி இடையே முரண்ப்பாடு எற்பட்டுள்ளது.

இதனையடுத்து பெண்ணின் சார்பில் அவருடைய தந்தை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கினார்.

இந்நிலையில் முரண்பாடு தீர்க்கப்பட்டதை தொடர்ந்து தனது மகள் சார்பவில் வழங்கிய முறைப்பாட்டினை மீள பெறுவதற்கு சென்றிருந்த நிலையில்,

திடீரென மயங்கி விழுந்து அவரை 1990 அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலை எடுத்துச் செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *