விவசாய அமைச்சினால் யூரியா விநியோக திட்டம்

விவசாய அமைச்சினால் யூரியா விநியோக திட்டம் முழு தணிக்கை செய்யப்படுகிறது. உர விநியோகத்தின் குறைபாடுகளை கண்டறியுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கணக்காய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
யூரியா விநியோகத்தின் போது ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து அமைச்சுக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் அமரவீரவின் நெருங்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்படும் யூரியா உரத்தை மானிய விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்திய சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இந்தியாவிடமிருந்து இலங்கை பெறுகிறது. அதில் 44,000 மெட்ரிக் தொன் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் பெரும் போகத்தில் பயிர்களை விளைவிப்பதை இலக்காகக் கொண்ட விவசாயிகளுக்கு 98 சதவீத யூரியா விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *