நல்லூரில் மாணவனை கடுமையாக தாக்கிய அதிபர் – விசாரணைகள் தீவிரம்!

நல்லூரில் மாணவன் மீது அதிபர் தாக்குதல்
யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள பாடசாலையொன்றில் மாணவன் மீது அதிபர் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதில் மாணவன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லூர் விநாயகர் வீதியைச் சேர்ந்த 14 வயது மாணவனே இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.

தான் சொன்ன பணியைச் செய்யவில்லை என்று தெரிவித்து அதிபர், மாணவனை கடுமையாகத் தாக்கினார் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதுடன் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் இன்று பிற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாழ். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *