இலங்கை நாடாளுமன்றின் முதலாவது தமிழ் பேசும் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்பாபிள்ளை அமர்ந்தலிங்கம் அவர்களின் 33 வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் அமைந்துள்ள தமிழ் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தீபம் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவு நிகழ்வில் சி.வி.கே சிவஞானம், கட்சி தொண்டர்கள், இளைஞர் என பலர் கலந்து கொண்டனர்.
அமரர் அப்பாபிள்ளை அமர்ந்தலிங்கம் அவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போது தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைவராக செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.