அடுத்த வாரம் முழுவதும் வரையறுக்கப்பட்டு டீசல் மற்றும் பெற்றோல் எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகத் அமைச்சர் காஞ்சனா விஜசேகர தெரிவித்தார்.
பெற்றோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் கப்பல்கள் இந்த வார ஆரம்பத்திலும் அடுத்த வாரமும் வருவதை உறுதி செய்த எரிபொருள் வழங்குநர்கள், வங்கி மற்றும் பிற காரணங்களுக்காக சரியான நேரத்தில் எரிபொருள் விநியோகிக்க முடியாது.
இது குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அடுத்த எரிபொருள் தொகுதி துறைமுகத்தில் இருந்து இறக்கப்படும் வரை, பொது போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
இந்த நேரத்தில், புதிய முன்னேற்றங்களுடன் கப்பலின் வருகை திதிகளை உறுதிப்படுத்த முடியவில்லை. அடுத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி வரும் வரை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் தற்காலிகமாக மூடப்படும் என்றும். சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.