சம்மாந்துறையிலும் பெற்றோல் வரிசையில் ஒருவர் மயங்கி விழுந்தார்

பெற்றோல் இருப்பதாக மக்களுக்கு திடீரென கிடைத்த தகவலை அடுத்து பெற்றோல் நிறப்பு நிலையத்திற்கு வருகை தந்து பெற்றோலுக்காக நீண்ட வரிசையில் பலர் காத்திருந்தனர்.. அந்த நேரத்தில் 50 வயதிற்கு மேல் மதிக்கத்தக்க ஒரு முதியவர் மயங்கி விழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் இருந்து அம்பாறை பிரதான வீதியில் உள்ள பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது..

பகல் உணவு நேரத்தையும் பொருட்படுத்தாது மக்கள் வரிசையில் காத்திருந்த நிலையிலேயே இவ்வாறு இடம்பெற்றது.

போலீஸ் நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு மக்களையும் சுமூக நிலைக்கு கொண்டு வந்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *