கீரிமலை புதிய கொலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆண் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
சங்கிலியன் நடராசா என்கிற 63 வயதான நபரே உயிரிழந்தவராவார்.
உயிரிழப்பு கொலை என்கிற ரீதியில் காங்கேசன்துறை பொலிசார் விசாரணைகளை நேற்றைய தினம் ஆரம்பித்துள்ள நிலையில் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையில் கொலை என்று திடீர் மரண விசாரணை அதிகாரி வைத்தியர் நமசிவாயம் பிரேம்குமார் உறுதிப்படுத்தியுள்ளார்..