இலங்கை போக்குவரத்து சபை டிப்போ டீசல் வழங்குவதற்கு மேற்கொண்ட இணக்கப்பாட்டின் காரணமாக இன்று (20) முதல் அனைத்து பஸ்களில் 50 வீதமான சேவைகள் இடம்பெறும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று முதல் நாடளாவிய ரீதியில் 10,000 இற்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுவதுடன் இந்த வாரம் 70% க்கும் அதிகமான தனியார் பேருந்துகள் இயக்கப்படும்.
இலங்கை போக்குவரத்து சபை டிப்போ மூலம் நாளாந்தம் 800,000 லீற்றர் டீசல் வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.