எரிவாயு இறக்குமதி தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் இல்லை

எதிர்வரும் நாட்களில் தேவையான சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யும் திட்டம் லிட்ரோ நிர்வாகத்திடம் இல்லை என்று இதனை தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ நிறுவனத்தில் தலைவராக நேற்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

எதிர்வரும் வாரங்களுக்கு இறக்குமதி எதுவும் திட்டமிடப்படாததால், சமையல் எரிவாயு விநியோகத்தில் உருவாக்கப்பட்ட நெருக்கடியைத் தீர்ப்பது கடினம் என்று அவர் குறிப்பிட்டார்.லிட்ரோவின் முன்னாள் தலைவர் விஜித ஹேரத் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டதாகத் தெரிகிறது. அடுத்த கப்பலை அவர் திட்டமிட்டிருக்கலாம். உண்மையை வெளிக்கொணரும் கடமையும் பொறுப்பும் எனக்கு உண்டு என முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்த கப்பலைத் திட்டமிடுவது தற்போது பேச்சுவார்த்தை அளவில் உள்ளது. தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு, ஷிப்மென்ட் பொதுவாக விநியோகஸ்தர் மூலம் தயார்படுத்து 14 நாட்கள் ஆகும்.

14 நாட்களுக்குள் செய்து முடிக்க முடியுமா அல்லது அதற்கு முன் இரண்டு எரிவாயு இறக்குமதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *