யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர் மாணவர் உட்பட 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 08 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை மைதானத்தில் இன்று மாணவர்கள் ஆசிரியர்கள் இருந்தவேளை குளவி கூட்டில் இருந்து கலைந்த குளவிகள் மாணவர்கள் ஆசிரியர்களை கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *