தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலிய

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 1 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த அவுஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச், இலங்கையை முதலில் பேட் செய்ய அழைத்தார்.20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 124  எடுத்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தனுஷ்க குணதிலக மற்றும் பாத்தும் நிஸ்ஸங்க ஆகியோரை இன்று நீண்ட நேரம் விக்கெட்டில் நிலைத்திருக்க அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை.குசல் மெண்டிஸ் மற்றும் சரித் அசலங்கா ஜோடி 66 ரன்கள் சேர்த்தது. சரித் அசலங்கா 39 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் பெற்றனர், வேறு எந்த துடுப்பாட்ட வீரரும் 15 ஓட்டங்களைக் கடக்க முடியவில்லை. கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளையும், ஜே ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

125 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை துரத்திய அவுஸ்திரேலியாவின் வலுவான துடுப்பாட்ட வரிசையினால் இலங்கை பந்துவீச்சாளர்கள் முன்னிலையில் இலக்கை இலகுவாக எட்ட முடியவில்லை.இலக்கை எட்டும் முயற்சியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், மேத்யூ வேட் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் ஆகியோர் அவுஸ்திரேலியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர், 17.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்கள் எடுத்து அவுஸ்திரேலியா வெற்றிபெற உதவியது. அவுஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட் (26), கேப்டன் ஆரோன் பின்ச் (13 பந்துகளில் 24), டேவிட் வார்னர் (21) ஆகியோர் அதிக ஓட்டங்கள் எடுத்தனர்.பந்து வீச்சில் ஹசரங்க 4 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர மற்றும் நுவான் துஷார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றி மூலம் அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் போட்டியையும் கைப்பற்றியது. இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *