கஸ்வத்த பிரதேசத்தில் குண்டு வெடிப்பு

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஹதென்ன, கஜு கஸ்வத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறம் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் அருகில் உள்ள பல வீடுகள் சேதமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிகுண்டு ஒன்றே இவ்வாறு வெடித்ததாகவும், சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் எல்பிட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த சம்பவத்தால்  குறித்த பகுதியில்  சற்றுநேரம் பரபரப்பு நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *