வவுனியாவில் மற்றுமொரு பதின்ம வயதுடைய சிறுமியின் சடலம் மீட்பு

வவுனியா – கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து 16 வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி நேற்று மாலை காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை மேலதிக வகுப்பிற்கு சென்ற குறித்த சிறுமி வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் சிறுமியின் வீட்டிற்கு அண்மித்த பாதையில் அவரது காலணி மற்றும் புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து குறித்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அப்பகுதியில் இருந்த கிணற்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *