கொழும்பில் துப்பாக்கி சுடு. ஒருவர் பலி

கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமிருவர் படுகாயமடைந்துள்ளனர்.  

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணை

 சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *