இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண கிக் பொக்சிங் போட்டிக்கான தெரிவுப்போட்டியில் வடக்கு வீர ,வீராங்கனைகள் பலர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா, கிளிநொச்சி ,மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் உலக கிண்ணப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சிறிலங்கா கிக் பொக்சிங் அமைப்பின் ஊடாக இந்தியாவில் இடம்பெற்ற தெரிவுப் போட்டியில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 7 வீர, வீராங்கனைகள் பதக்கங்களை பெற்றுள்ளனர்.கடந்த 27ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமான போட்டிகள் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.குறித்த போட்டியில் இலங்கை, இந்தியா, இத்தாலி நாட்டினை சேர்ந்த வீர ,வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.
கிக் பொக்சிங் போட்டியில் 4 தங்கப் தக்கமும் , 1 வெள்ளி பதக்கமும்; மல்யுத்த போட்டியில் 2 வெள்ளி பதக்கம் உட்பட மொத்தமாக 7 பதங்கங்கள் கிடைத்துள்ளன.குறித்த இப்போட்டியில் வெற்றி பெற்ற வீர, வீராங்கனைகள் உலக கிக் பொக்சிங் சங்கத்தினூடாக 3 மாத பயிற்சியை இந்தியாவில் பெற்று, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உலகப் கிண்ண போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர் .
மேலும் ஆசிய கிக் பொக்சிங் சங்கத்தின் தலைவரும் பயிற்றுனருமாகிய செல்வரத்தினம் நந்தகுமார் தலைமையில் குறித்த மாணவர்கள் போட்டிக்கு சென்று பதக்கங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.