தீவக மக்களுக்கான மண்ணெண்ணெய் இன்றைய தினம் வழங்கப்பட்டது

யாழ் இந்திய உதவித்துணைத்தூதரகத்தின் எற்பாட்டில் யாழ் தீவக வாழ் மீனவ குடும்பங்களின் வாழ்வாதார மீன்பிடி தொழிலுக்காக வடக்குமாகாண மக்களுக்கான அட்சயபாத்திர உதவிகளில் மண்ணெண்ணெய் வழங்கும் கருப்பொருளிலான நிகழ்வு இன்று யாழ் ஊர்காவற்துறை பிரதேச செயல செயலாளர் திருமதி மஞ்சுளா தேவி சதீஸ்சன் தலைமையில் இடம்பெற்றன.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் இந்திய உதவித்துணைத்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் பாஸ்கர் கலந்துகொண்டு உரிய மீனவர்களுக்கான மண்ணெண்ணெயினை வழங்கிவைத்தனர்.

எழுவைதீவு நயினாதீவு அனலைதீவு நெடுந்தீவு ஆகிய தீவக மீனவ மக்களுக்கான மீனவர்களுக்கு மாத்திரம் பகிர்ந்தளிக்கப்படயிருக்கின்றது பிரதேச செயலாளர்கள் ஊடாகவும் மற்றும் நீரியல்வளத்திணைக்களத்தின் ஊடாகவும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. 705 மீனவர்கள் நன்மைகளை பெறயிக்கின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இவ் நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய முகவர்கள் மற்றும் மீனவ சமூகத்தினர்கள் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *