லாஃப் கேஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த வாரம் முதல் எரிவாயு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

வீட்டு உபயோகத்திற்குத் தேவையான வாயுவை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு தனது நிறுவனம் தினசரி எரிவாயுவை வழங்கி வருவதாக தலைவர் கே.எச். திரு.வாகபிட்டிய “திவயின” க்கு தெரிவித்தார்.

அடுத்த வாரத்திற்குள் எரிவாயுக் கப்பல் ஒன்று தீவை வந்தடைய உள்ளதாகவும், அதனை பெறுவதற்கு தேவையான டொலர் தொகையை மத்திய வங்கி நிறுவனத்திற்கு வழங்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவம் மற்றும் கணிக்க முடியாத செயற்பாடுகளினால் இந்நாட்டு மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
20 வருடங்களாக மக்களுக்கு எரிவாயு வழங்கிய நிறுவனம் என்ற வகையில் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம்.
மத்திய வங்கி ஏனைய நிறுவனங்களைப் போன்று எமக்கு டொலர்களை வழங்கி கடன் கடிதங்களை வழங்கினால் எமது சேவையை மக்களுக்கு வழங்க முடியும். அடுத்த வாரத்தின் பின்னர் இந்நிலையை மாற்ற எதிர்பார்க்கின்றோம் எனவும் திரு.வாகபிட்டிய தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *