பாலிவுட்’ல சுஷாந்த்க்கு நடந்தது இங்க சிவகார்த்திகேயனுக்கு நடந்துச்சு’ தயாரிப்பாளர் சொன்ன உண்மை சம்பவம் !

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டிய நடிகர் சிவகார்த்திகேயன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான்.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி. பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிளாக்பஸ்டராக மாறியுள்ள இப்படம் சிவகார்த்திகேயனுக்கு மைல்கல்லாக மாறியுள்ளது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது ஒரு சில படங்களின் ரிலீஸ் சமயத்தில் அவர் பட்ட கஷ்டம் குறித்து பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் ஒரு பேட்டியில் பேசிய வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபாரமானது. பல நடிகர்கள் பல ஆண்டுகளாக செய்ததை சிவகார்த்திகேயன் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே செய்ததால் அது சிலருக்கு பிடிக்காமல் போனது.

அதனாலேயே அவருக்கு பல வழிகளில் பல பிரச்சனைகளை கொடுத்தனர். கிட்டத்தட்ட பாலிவுட்டில் சுஷாந்த்துக்கு நடந்த கொடுமை மாதிரியே சிவகார்த்திகேயனுக்கும் கொடுமைகள் நடந்தது ஆனால் சிவகார்த்திகேயன் நன்றாக ஹேண்டில் செய்தார் என தயாரிப்பாளர் ரவீந்தர் சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *