இலங்கை பணியாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் டொலர் தொகை வீழ்ச்சி!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களால் மாதாந்தம் நாட்டிற்கு அனுப்பப்படுகின்ற டொலர் தொகை, 250 மில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு அனுப்பப்படும் டொலர் தொகை துரிதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
அதற்கான பாரிய பொறுப்பு இலங்கை பணியாளர்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் வங்கிகள் ஊடாக நாட்டிற்கு டொலர்களை அனுப்பும் இலங்கை பணியாளர்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

https://www.facebook.com/PVL-DAILY-News-110920444653131/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *