அக்கரைப்பற்றில் இடம்பெற்ற பயங்கரம்

அக்கரைப்பற்று, இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சின்ன முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோடரியால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த குறித்த நபர், அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் போது சந்தேகநபரும் காயமடைந்துள்ள காரணத்தினால், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் , அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *