யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்

ஸ்ரீலங்கா சுமித்ரயோ அமைப்பின் யாழ்.கிளை தொண்டர்களினால் ஒரு கிலோ நம்பர் 1 நாட்டரிசி ஒரு ரூபாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

நேற்றய தினம் இடம்பெற்ற இந்நிகழ்வு தொடர்பாக சுமித்ரயோ அமைப்பின் தொண்டர்கள் கருத்த தொிவிக்கையில்,

தற்கொலை தடுப்பு செயற்பாட்டை முன்னெடுத்து வரும் நாம், மக்கள் மத்தியில் தற்கால பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் வகையில், மக்களுக்கு மன ரீதியான ஆறுதல் தேவை என்பதை உணர்த்தும் முகமாக இவ் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஒரு ரூபா உள்ளவருக்கு மட்டுமே அரிசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.முதிரைச் சந்தியை அண்மித்தபகுதி, கல்வியங்காடு சட்டநாதர் கோவிலடி ஆகிய பகுதிகளில் இவ்விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *