கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா..!


செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வழியாக நடந்து வருகிறது. 16 வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
நடப்பாண்டில் இரண்டாவது முறையாக உலக சாம்பியனை வீழ்த்தியிருக்கிறார் 16 வயதே நிரம்பிய பிரக்ஞானந்தா.செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வழியாக நடந்து வருகிறது. 16 வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் தொடரின் ஐந்தாவது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தி மீண்டும் சாதனை நிகழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா.
சதுரங்க சாம்பியன் போட்டியானது 9 தொடர்களாக பிப்ரவரி மாதத்தில் தொடங்கி நவம்பர் வரை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது நான்காவது தொடரான செசபிள் மாஸ்டர்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *