நெஞ்சுக்கு நீதி-’செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு’…! படத்தை பார்த்த ரசிகர்களின் விமர்சனம்…

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதய நிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ நெஞ்சுக்கு நீதி’. இந்த படத்தில் தான்யா நாயகியாக நடிக்கிறார். உதய நிதி ஸ்டாலின் இந்த படத்தில் போலீஸாக நடிக்கிறார். மேலும் உதய நிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்த பிறகு ரிலீஸாகிற படம்.

அதனால் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.காமெடி கலந்த படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த உதய நிதி ஸ்டாலின் தன்னுடைய ரூட்டை மாற்றி ’மனிதன்’ என்ற படத்தின் மூலம் தன் நடிப்பை வெளிப்படுத்தினார். அந்த படம் வெற்றி பெற்றது. அதன் பிறகு அவருடைய கெரியரிலயே முக்கியமாக கருதப்பட்ட படம் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ’சைக்கோ’ படம். இந்த படத்தில் உதய நிதி ஸ்டாலின் குருடனாக நடித்திருப்பார்.யாரும் எதிர்பார்க்காத உதய நிதி ஸ்டாலினை இந்த படத்தில் காண முடிந்தது. அந்த அளவுக்கு அற்புதமாக நடித்தார்.

அதன் பிறகு நிறைய காமெடி படங்களே வந்த நிலையில் போனிகபூர் ஹிந்தியில் ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக்கை கூற உதய நிதி ஸ்டாலினுக்கு பிடித்து தற்சமயம் நெஞ்சுக்கு நீதியாக திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.இந்த படத்தை பார்த்தவர்கள் படம் நன்றாக இருக்கிறது. சாதியை உயர்த்தி பேசுபவர்களுக்கு இந்த படம் ஒரு பாடமாக இருக்கும் மேலும் செருப்பால அடிச்ச மாதிரியும் இருக்கும் என கூறுகின்றனர்.மேலும் அனைவருக்கும் சட்டம் சமமானது என உணர்த்துகின்ற படமாக இருக்கிறது. அரசியலுக்கு வந்த பிறகும் இப்படி ஒரு படத்தில் அவரை பார்ப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறுகின்றனர். ஜெய்பீம், பரியேரும் பெருமாள் போன்ற படங்களின் வரிசையில் இந்த படமும் நல்ல வரவேற்பை பெரும் என்று கூறினர். படத்தை எடுத்த அருண் ராஜா காமராஜிற்கு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *