அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தியவசிய உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தகவலை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் சில தீர்மானங்கள் காரணமாக எதிர்காலத்தில் இந்நிலை உருவாக்கலாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் இதன் போது எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த சுற்றறிக்கைகளை ரத்து செய்ய , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.அத்துடன் டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீட்க முடியாதுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் போது கருத்துத் தெரிவித்த வஜிர அபேவர்தன அத்தியவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான துரித அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

sinthupuvi

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *